திரையில் போதைக்கு அடிமை.. நிஜத்தில் இப்படியா!! தலைவர் விஜய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்..
தமிழ்நாட்டில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தான். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சராயம் அருந்தி தற்போது ஜூன் 20 காலை 9 மணி நிலவரப்படி 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் பல அரசியல் கட்சிகள் இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டும் நேரில் சென்றும் வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என்று கூறி ஒரு பதினை பகிர்ந்திருந்தார்.
இதற்கு நெட்டிசன்கள் பலர், மாஸ்டர், லியோ படத்தில் மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையாக கிடக்கும் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு இப்படி ஒரு அறிவுரை கூறுகிறார் என்று கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் லியோ படத்தில் இடம்பெறும் நான் வரவா பாடலை பகிர்ந்து கலாய்த்தும் வருகிறார்கள்.
Vaa naa vaa naa vaa naa....pic.twitter.com/MV9Pbu3jVo https://t.co/0MNrUwkRw1
— Trollywood 𝕏 (@TrollywoodX) June 20, 2024