கமெண்ட்ஸ்-க்கு பயந்து ரெண்டே மாசத்தில் தள்ளாடும் சீரியல் நடிகை மகாலட்சுமி.. அவ்வளவு பயமா?
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து ஃபேட்மேன் என்று கூறப்படும் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்தார் நடிகை மகாலட்சுமி. இரு ஆண்டுகளாக மறைமுகமாக காதலித்து வந்த இருவரும் கடந்த செப்டம்பர் 1 ஆம்தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த செய்தி இணையத்தில் பரப்பாக பேசப்பட்டு காசுக்காக அந்த நபரை திருமணம் செய்திருக்கிறார் என்று மகாலட்சுமியை விமர்சித்து வந்தனர். இதற்கு எல்லாம் விளக்கம் அளித்தும் பேட்டிக்கொடுத்தும் வந்தனர்.

இதன்பின் தங்களின் ரொமாண்டிக் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்த தம்பதினர் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் வருகிறார்கள். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மகாலட்சுமி காரி முன் க்யூட்டாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆனால் அப்புகைப்படத்தி ரசிகர்கள் கருத்து கூறும் கமெண்ட்ஸ் செக்மெண்ட்டை எடுத்துள்ளார். அதில் யாரும் கமெண்ட் செய்யாதவாறு செட்டிங் செய்ததை இணையத்தில் அப்புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் செய்து வருகிறார்.
அப்படி ரசிகர்கள் மீது ஏன் இவ்வளவு பயம் என்று கேலி செய்து வருகிறார்கள். இதனால் அந்த செட்டிங்கை நீக்கிவிட்டு கருத்துக்கள் கூறும் வகையில் மீண்டும் ஆன் செய்துள்ளார் மகாலட்சுமி.