வாய்ப்புக்காக ஆடிஷனுக்கு சென்ற நடிகை நயன்தாரா!! பிரபல இயக்குனர் செய்த காரியம்..

Parthiban Nayanthara Gossip Today Tamil Actress Actress
By Edward Apr 06, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. ஐயா படத்தில் தமிழில் நடிக்க ஆரம்பித்து தன்னுடைய திறமையால் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன் தாரா, வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நயன் தாரா, அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பல தொழில்களை செய்து காசு சம்பாதித்து வருகிறார்.

வாய்ப்புக்காக ஆடிஷனுக்கு சென்ற நடிகை நயன்தாரா!! பிரபல இயக்குனர் செய்த காரியம்.. | Parthipan Rejected Nayanthara For Old Face Look

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர், நயன்தாரா சினிமாவில் நடிக்க வாய்ப்புத்தேடி கொண்டிருக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். நயன் தாரா கேரளாவில் பிறக்கவில்லை, அவர் பிறந்த ஊர் பெங்களூர் தான். டையானா மரியம் குரியன் என்ற பெயரில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்திருக்கிறார். 2003ல் வாய்ப்பு தேடி சென்ற போது, இயக்குனர் பார்த்திபன் இயக்கும் ஒரு படத்தில் கதாநாயகி தேவை என்பதை அறிந்துள்ளார்.

வாய்ப்புக்காக ஆடிஷனுக்கு சென்ற நடிகை நயன்தாரா!! பிரபல இயக்குனர் செய்த காரியம்.. | Parthipan Rejected Nayanthara For Old Face Look

அதனால் எந்தவொரு பரிந்துரையும் இல்லாமல் பார்த்திபன் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார் நயன்தாரா. அப்போது பார்த்திபன் நயன் தாராவை ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து, போன் நம்பர் கொடுத்துட்டு போங்க, பின் சொல்லி அனுப்புகிறோம் என்று சம்பிரதாயமாக வார்த்தையை கூறி அனுப்பி வைத்திருக்கிறார். தன்னுடையை யூனிட்டில் இருப்பவர்களிடம், இந்த பொண்ணுக்கு முத்தின மூஞ்சியாக இருக்கு, இது நம்ம கதைக்கு செட்டாகாது, சின்ன பொண்ணாக இருக்கணும் என்று ரிஜெக்ட் செய்திருக்கிறார்.

எனக்கு தமன்னா அதுக்கு நல்லா ஒத்துழைப்பு கொடுத்தார்!! கூச்சமில்லாமல் பேசிய காதலர் விஜய் வர்மா

எனக்கு தமன்னா அதுக்கு நல்லா ஒத்துழைப்பு கொடுத்தார்!! கூச்சமில்லாமல் பேசிய காதலர் விஜய் வர்மா

யூனிட்டில் இருந்த ஒருவர், பார்த்திபனுக்கு தெரியாமல், நயன் தாராவை தேடி சென்றிருக்கிறார். கேரளாவிற்கு செல்லும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த நயன் தாராவிடம் அந்த நபர், இயக்குனர் ஹரி, நடிகர் சரத்குமாரை வைத்து ஒரு படம் இயக்குகிறார். அந்த படத்தில் கதாநாயகி தேவைப்படுகிறது என்று கூறி ஹரி அலுவலகத்தின் முகவரியை கொடுத்திருக்கிறார். பின் ஹரி அலுவலகத்திற்கு சென்று ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வும் ஆகிவிட்டார். பின் நயன் தாரா என்ற பெயரை மாற்றிக்கொண்டார் என்று வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார்.