பரிதாப நிலையில் பிரியா பவானி சங்கர்.. மார்க்கெட் இல்லாமல் அங்கேயும் அவமானம் தான்..
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும் சீரியல் நடிகையாக இருந்து பின் வெள்ளித்திரை நடிகையானவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக கால் பதித்திருர்ந்தாலும் அதன்பின் அவருக்கான ஸ்கோப் கொடுக்கும் கதாபாத்திரம் அமையவில்லை.
25 படங்களில் நடித்துள்ள அவர் அவரது 26 வது படமாக தெலுங்கில் ஈஸ்வரன் கார்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே தமிழில் இரண்டாம் நடிகை ரோல்கள் அமைவதால் அப்செட்டில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோலில் நடிக்க முடிவெடித்திருந்தார்.

ஆனால் தெலுங்கில் அறிமுகமாகவுள்ள நிலையில் அந்த படத்திலும் இரு கதாநாயகிகள் இருக்கிறார்களாம். இங்க இருந்து அங்கே போனாலும் மறுபடியும் அதேதானா என்று பிரியா பவானி சங்கர் அப்செட்டில் இருந்து வருகிறாராம்.
கையில் பத்து தல, இந்தியன் 2, ருத்ரன், அகிலன் உள்ளிட்ட படங்கள் கையில் இருந்தும் அப்படம் வெளியாக அடுத்த ஆண்டு ஆகுமாம். இப்படியே சென்றால் தன்னுடைய மார்க்கெட்டுக்கு பங்கம் வந்துவிடும் என்ற பயத்தில் இருந்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.