3 கோடிக்கு ECR-ல் பங்களா, ரோல்ஸ் ராய்ஸ் கார்-ஆ!! உண்மையை உடைத்த நடிகை பிரியா பவானி சங்கர்..
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்க ஆர்மபித்து பின் அதன்மூலம் வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார்.
மேயாத மான் என்ற படத்தின் மூலம் திரைப்பட கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் பிரியா பவானி சங்கர் 3 கோடிக்கு ECR-ல் பங்களா வாங்கி காதலர் குடியேறியதாக செய்திகள் வெளியானது.
அதற்கு பிரியா பவானி சங்கர் ECR பகுதியில் வீட்டு வாங்கியதாக காதலருடன் எடுத்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்தார். அதன்பின் பிரியா பவானி சங்கர் பற்றிய பல வதந்தி செய்திகள் பரவியதை கேட்டு பதிலளித்துள்ளார்.
சமீபத்தில், சென்னையில் ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பித்துள்ளதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதன் பிரமோஷனுக்காக பேட்டியொன்றில், தொகுப்பாளர் தங்களை பற்றிய செய்திகளை பற்றி சிரித்திருக்கிறார்களா என்று கேட்டுள்ளார்.
அதற்கு பிரியா பவானி, நிறைய இருக்கிறது. நான் இதை சொன்னே அதை சொன்னேன்னு எழுதுனாங்க. A-ன்னு ஆரம்பிச்சி Z-வரை போகும் என்ன சோர்ஸ் என்று கூறியுள்ளார்.
மேலும், 3 கோடிக்கு ECRல் பங்களா வாங்கினேனா என்று கேட்டதற்கு, 3 கோடிக்கு ECRல் பங்களா வாங்க முடியாது. வீடு வாங்குனது உண்மை தான். வீடூ வாங்கி சென்றோம் அவ்வளவு தான்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கினா என்ன தப்பு. அது ஏன் அவ்வளவு தப்பா பேசுறாங்க. எழுத எழுத வாங்குவோம் என்று காமெடியாக கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.