ஆணவத்தில் எல்லைமீறிய பார்த்திபன்: ஏ.ஆர்.ரஹ்மான் முன் மைக்கை தூக்கி நடிகர் மீது எறிந்ததால் பரபரப்பு
நடிகர் பார்த்திபன் எப்போதும் வித்தியாசமாக யோசித்து பேசக்கூடியவர். அவர் மேடையில் பேசினாலும் சரி, அல்லது ட்விட்டரில் பதிவிட்டாலும் சரி எல்லாமே வித்யாசமாக தான் இருக்கும்.
இப்படி பற்றி நடிகர் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் இயக்கி இருக்கும் இரவின் நிழல் படத்தில் இசை விழா நடைபெற்று இருக்கிறது. அதில் நடிகர் பார்த்திபன் கோபமாக மைக்கை தூக்கி எறிந்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் அங்கு அவர் அருகில் அமர்ந்திருக்கும் நிலையில் பார்த்திபன் இப்படி செய்தது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ஆணவத்தில் இப்படி செய்திருக்கிறார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
பாடல் தொடங்குவதை அறிவிக்கும்படி பார்த்திபன் ரோபோ ஷங்கரிடம் கூற, அவர் மைக் இல்லை என கூறுகிறார். அதனால் தான் அவர் கோபமாக மைக்கை ரோபோ ஷங்கர் மீது தூக்கி வீசி இருக்கிறார்.
வீடியோ இதோ..
மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்: அதிர்ச்சியில் உறைந்து போன ஏ.ஆர்.ரகுமான்! https://t.co/wupaoCzH82 | #Parthiban #ARRahman #IravinNizhal pic.twitter.com/W6XZwqoTnl
— ABP Nadu (@abpnadu) May 2, 2022