ஸ்ரீகாந்த் கைது!! கேள்விக்குறியான நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் படவாய்ப்பு? காரணம் இதான்...

Srikanth Actors Rachitha Mahalakshmi Drugs
By Edward Jun 26, 2025 01:30 PM GMT
Report

ஸ்ரீகாந்த் கைது

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீகாந்த். வெற்றிப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீகாந்த், நண்பன் படத்திற்கு பின் பெரியளவில் பேசப்படாத நடிகராக திகழ்ந்தார். சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் பற்றிய பேச்சுக்கள் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

ஸ்ரீகாந்த் கைது!! கேள்விக்குறியான நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் படவாய்ப்பு? காரணம் இதான்... | Rachitha Mahalakshmi Worried Actor Srikanth Arrest

ரச்சிதா மகாலட்சுமி

இந்நிலையில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதால், நடிகை ரச்சிதா மகாலட்சுமி, மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம். அதாவது ரச்சிதா மகாலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் என்று ஒருசில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த படத்தில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், ஹீரோவாக நடித்து வந்தார்.

ஸ்ரீகாந்த் கைது!! கேள்விக்குறியான நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் படவாய்ப்பு? காரணம் இதான்... | Rachitha Mahalakshmi Worried Actor Srikanth Arrest

தற்போது ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுவிட்டது. அது மட்டுமில்லாமல் அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ரச்சிதாவுடன் நடித்த இப்படத்தின் ஷூட்டிங்கை ஸ்ரீகாந்த் முடித்துவிட்டாரா? பாதியில் நிற்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை படப்பிடிப்பு முடியவில்லை என்றால் தயாரிப்பாளர் முதல் ஹீரோயின் டேட் வரை சிக்கலில் தவிப்பார்கள்.

ஸ்ரீகாந்த் கைது!! கேள்விக்குறியான நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் படவாய்ப்பு? காரணம் இதான்... | Rachitha Mahalakshmi Worried Actor Srikanth Arrest

படத்திற்காக இதுவரை செய்த செலவு உட்பட இப்படத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இப்போது தான் ஒருசில படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் ரச்சிதா, ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த படம் வெளியாகுமா என்ற கேள்வியில் ரச்சிதா கவலையில் இருக்கிறாராம்.

இதுமட்டுமின்றி, ஒருவேளை நடிகரை மாறினாலும் ரச்சிதாவின் கால்ஷீட்டில் பிரச்சனை ஏற்பட்டு வேறுபடத்தில் கமிட்டாக முடியாமல் போகுமோ என்ற பயத்திலும் இருக்கிறாராம் ரச்சிதா.