60 வயது நடிகருடன் விடுதியில் தனிமையில் இருந்தது ஏன்? உண்மையை கூறிய 43 வயது நடிகை..
தெலுங்கு சினிமாவில் உலகில் முன்னணி நடிகராகவும் நடிகர் மகேஷ்பாபுவின் உறவினராகவும் இருப்பவர் நடிகர் நரேஷ் பாபு. 60 வயதான நடிகர் நரேஷ் பாபு ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இதன்பின் ரம்யா டகுபதி என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
இருவருக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனையடுத்து நரேஷ் பாபு 43 வயதான நடிகை பவித்ரா லோகேஷை 4வது திருமணம் செய்யவுள்ளதாகவும் இருவரும் நெருக்கமாக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.

பவித்ராவுடன் விடுதியில்
இதனை அடுத்து நடிகை பவித்ராவை4 வது திருமணம் செய்யவுள்ளதை அறிந்த மூன்றாம் மனைவி ரம்யா டகுபதி, எங்கள் வாழ்க்கையில் பிரச்சனை வர பவித்ரா தான் காரணம் என்றும் அவள் வந்ததில் இருந்து தான் எங்கள் வாழ்க்கையில் சண்டைகள் ஏற்பட்டு பிரிந்தோம் என்றும் கூறியிருந்தார்.
பின் இதையெல்லாம் கண்டுகொள்ளாத நரேஷ் பாபு நடிகை பவித்ரா லோகேஷுடன் ஒரு விடுதியில் தனியாக இருப்பதை அறிந்த அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ரம்யா. தகவல் அறிந்து வந்த போலிசார் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.
மேலும் நரேஷ் - பவித்ரா விடுதியை விட்டு வெளியேறும் போது ரம்யா செருப்பை கழட்டி அடித்த முயன்றுள்ளார். இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Me Abandoning all the Works and Going into Theatres ❤️#Naresh #Pavithra pic.twitter.com/4XxissiJLZ
— ?????????️ (@Wishnuvv) July 3, 2022
வெறும் நட்பு தான்
இதன்பின் நரேஷுடன் விடுதியில் ஏன் இருந்தேன் என்று விளக்கத்தை அளித்துள்ளார் பவித்ரா. நரேஷ் பாபு நடித்த 200 படங்களில் அவருடன் இணைந்து 4, 5 படங்களில் நடித்திருக்கிறேம். நான் சுசீந்திர பிரசாத்தை திருமணம் செய்து 11 ஆண்டுகள் வாழ்ந்து பின் சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளார்.
விவாகரத்து பிறகு நானும் அவரும் நட்போடு பேசி தான் வருகிறோம் என்றுக்கூறியுள்ளார். மேலும் நரேஷின் அறிமுகம் கிடைக்கும் போது அவர் மகேஷ் பாபுவின் உறவினர் என்று எனக்கு தெரியாது என்றும் படத்தில் பணியாற்றும் போது சொந்த விசயங்களை அவரிடம் பகிர்ந்து கொண்ட போது வீட்டில் யாரும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விசயத்தை ரம்யா தேவையில்லாமல் என்னை அவரது குடும்ப பிரச்சனையில் இழுப்பதாகவும் கூறியிருந்தார்.

கோபத்தில் 3ஆம் மனைவி
இந்நிலையில் தனது கணவர் நரேஷ் பாபு மற்றும் பவித்ரா பற்றி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார். அதில் பவித்ரா லோகேஷ் கழுத்தில் போட்டிருக்கும் வைர நெக்லஸ் தன்னுடைய மாமியாருடையது என்றும் பிறந்த நாளுக்கு தனது கண்வர் நகைகளை வாங்கித்தருவார் என்று கூறியுள்ளார். என்னையும் தன் கணவரையும் பவித்ரா பிரித்துவிட்டார். எனக்கு என் கணவர் வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ரம்யா.