5 நிமிஷத்துக்கு 40 லட்சம் வாங்கிய ஆர்யா மனைவி!! சிம்பு படத்தில் நடிகை பிரியா பவானி சங்கரின் சம்பளமே இவ்வளவு தான்...
சினிமாவை பொறுத்தவரையில் ஒரு நடிகையின் மார்க்கெட் எவ்வளவு இருக்கிறது அந்த நடிகையை கோடிகளை வாரிக்குவித்து தங்களின் படங்களில் நடிக்க புக் செய்வார்கள். ஆனால் ஒருசில நடிகைகள் முழு படத்தில் நடித்தும் லட்சத்தில் தான் சம்பளமே வாங்குவார்கள்.
அப்படி ஒரேவொரு ஐட்டம் சாங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, அதுவும் 5 நிமிட பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டு பல லட்சங்களை சம்பாதித்து இருக்கிறார் ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷா.
ஆர்யாவை திருமணம் செய்து குழந்தை பெற்ற சாயிஷா, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கவர்ச்சி ரூட்டிற்கு மாறியிருக்கிறார். நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற பத்து தல படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டார் சாயிஷா. இப்பாடலில் ஆட்டம் போட ஆர்யா தான் காரணம் என்று சாயிஷா கூறியிருந்தார்.
அப்பாடலுக்கு நடிகை சாயிஷாவுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளார்களாம். 5 நிமிட பாடலுக்கு இப்படியொரு தொகையை பெற்றுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பத்து தல படத்தில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அவருக்கு சம்பளமாக 70 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
5 நிமிடம் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சாயிஷாவுக்கே 70 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில் பிரியா பவானி சங்கர் அதை விட 30 லட்சம் தான் கூடுதலாக பெற்றிருக்கிறார். இதேபோல் தான் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கதாநாயகியாக சாயிஷாவும் - இரண்டாம் கதாநாயகியாக பிரியா பவானி சங்கரும் நடித்திருந்தார்கள். இப்படி லட்சத்தில் சம்பளம் வாங்குவதால் தான் பிரியா பவானி சங்கர், ரெஸ்ட்டாரெண்ட் மற்றும் விளம்பரங்கள் மூலம் சம்பாதித்து வருகிறாராம்.