பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக இதான் காரணம்!! சீரியல் நடிகை ரித்திகா..
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் ஆரம்பத்தில் அமிர்தா ரோலில் நடிகை ரித்திகா தான் நடித்து வந்திருந்தார். ஆனால் இடையில் சில காரணங்களால் சீரியலில் இருந்து திடீரென விலகிவிட்டார்.
தற்போது திருமணமாகி கர்ப்பமாக இருக்கும் ரித்திகா சீரியலைவிட்டு விலக காரணம் என்ன என்று பேட்டியொன்றில் பகிர்ந்திருக்கிறார். அதில், நான் கல்யாணத்திற்கு பின் நடிக்க வேண்டும் என்று தான் நினைத்தேன்.
நான் நடிக்கக்கூடாது என்று என் கணவரோ அல்லது என் அம்மா வீட்டிலோ, என் கணவர் வீட்டிலோ யாரும் சொல்லவில்லை.
ஆனால் எனக்கு உடல்நிலையில் சில பிரச்சனை ஏற்பட்டதால்தான் சீரியலில் இருந்தும் நடிப்பைவிட்டும் விலகினேன். அந்நேரத்தில் சில மாதங்கள் கழித்து நான் கர்ப்பமாகிவிட்டேன்.
இது கடவுள் கொடுத்த வரம் என்பதால் இதனை மனப்பூர்வமாக ஏற்று இந்த வாழ்க்கைக்கு தயாராகிவிட்டேன் என்று ரித்திகா தெரிவித்துள்ளார்.