ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டதால் அப்படியொரு கேள்வி!! கடுப்பாகி பதிலடி கொடுத்த நடிகை ரித்திகா..
நடிகர் மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங். இப்படத்திற்கு பின் இவர் ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்த அனு என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சினிமாவை தாண்டி fitness ல் ஆர்வம் காட்டி வரும் ரித்திகா சிங் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருந்தார். அப்படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரித்திகாவிடம் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை, படவாய்ப்பு உங்களுக்கு கிடைக்கவில்லையா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதனால் கடுப்பாகிய ரித்திகா, என் மனதுக்கு பிடித்திருந்தால் மட்டும் அப்படத்தில் நடிப்பேன் என்றும் எந்த சூல்நிலையிலும் வேண்டாத படத்தில் நடிக்கமாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மலையாளம், இந்தி, மராத்தி மொழியாக இருந்தாலும் கதை, என் ரோல் பிரித்திருந்தால் நடிப்பேன்.
அதுவும் படத்தில் இருக்கும் ரோல் சரியான முறையில் அமைந்தால் அக்கேரக்டரில் நடிக்க ஓகே சொல்வேன் என்று ரித்திகா பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படியான ரித்திகாவின் பதிலுக்கு பலரும் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.