அப்பா அம்மாவை கைகழுவி விட்டாரா விஜய்? சோகத்தில் மனைவியுடன் SA சந்திரசேகர் செய்த செயல்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் மீது அப்பா, அம்மா விசயத்தில் குறை வைத்து வருவதாக கருத்துக்கள் எழுந்து வருகிறது. அப்படி 1978 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமாகிய எஸ் ஏ சந்திர சேகர் தனது மகன் விஜய்யை வைத்து நாளைய தீர்ப்பு, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர், சுக்கிரன் போன்ற படங்களை இயக்கி பெரிய இடத்திற்கு கொண்டு சென்றார்.
அப்பா அம்மாவுடன் அரசியல் பிரச்சனை
விஜய் வாழ்க்கையில் மிகப்பெரிய தூணாக விஜய் இருந்து வந்த நிலையில் சமீபகாலமாக விஜய் அப்பா அம்மாவை கை நழுவி விட்டதாகவும் கூறி வருகிறார்கள். விஜய்க்கும் அப்பாவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டு அரசியலில் தன் பெயரை பயன்படுத்த கூடாது என்பதற்காக அப்பா அம்மா மீதே புகாரளித்திருந்தார் விஜய். இது மிகப்பெரிய விசயமாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வந்தது.
பெற்றோரின் ஆதங்கம்
இதுகுறித்தும் தன் மகன் விஜய் குறித்தும் எஸ் ஏ சந்திரசேகர், என் மகன் மாதம் ஒரு முறை வீட்டிற்கு வந்து எங்களை சந்திக்க வேண்டும் என்று விஜய் பிறந்த நாளின் போது கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் அவரது 81வது பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளார். மனைவியுடன் கேக் வெட்டிய புகைப்படத்தை பகிர்ந்தும் கொண்டார்.
கைநழுவிய விஜய்
தந்தை பிறந்தநாளுக்கு கூட வரவில்லையா என்ற விமர்சனமும் விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. என்னதான் இருந்தாலும் வயதான காலத்தில் தாய் தந்தையை இப்படியா நடத்துவது என்ற கடுமையான விமர்சனங்களையும் இணையத்தில் கேட்டு வந்தனர்.
அதேபோல் 81 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவிலுக்கு சென்ற எஸ் ஏ சந்திரசேகர், மனைவி ஷோபாவுடன் சேர்ந்து ஆயுள் விருக்தி கிடைக்க பூஜை செய்திருக்கிறார். அப்போது விஜய் வராமல் பெற்றோர்களை ஒதுக்கி வந்துள்ளார். இந்த விசயம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஆயுள் விருத்திக்காக தாய் தந்தைக்கு சிறப்பு பூஜை..! விஜய் இல்லை.. #Vijay #SAC #Shoba pic.twitter.com/aTP2pMajJz
— Polimer News (@polimernews) July 4, 2022