அந்த இடத்தில் யாருக்கு முடி இருக்கும்!! புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்த நடிகை சமந்தா..
தென்னிந்திய நடிகையாக டாப் இடத்தில் இருந்து வரும் நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்தும் படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் விவாகரத்து பெற்ற சில ஆண்டுகளில் சமந்தா வீட்டார் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய விரும்பியுள்ளனர்.
அதற்காக மாப்பிள்ளையும் பெற்றோர்கள் பார்த்துள்ளதாகவும் நடிகை சமந்தா வேறொரு வாரிசு நடிகருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் செய்திகள் கசிந்திருந்தது. ஆனால் சமந்தா தரப்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
சமீபகாலமாக நடிகை சமந்தா மயோசிடிஸ் பற்றிய விழிப்புணர்வு தகவல்களையும் உடல் பாதுகாப்பு குறித்த சில தகவல்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இதனை சிலர் விமர்சித்து வந்த நிலையில், கடந்த சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றதோடு பல கோடி நஷ்டத்தை சந்தித்தது.
பிரபல தயாரிப்பாளர் சிட்டி பாபு, சமந்தாவின் சினிமா வாழ்க்கை சாகுந்தலம் படத்தோடு முடிவுக்கு வந்து விட்டது. தன்னுடைய உடல் நிலை கூறி அனுதாபத்தை பெற கண்ணீ விட்டு பிரமோஷன் செய்கிறார் என்றும் கூறியுள்ளார். முன்னாள் கணவரை பிரிந்ததை பற்றியும் படுமோசமாக விமர்சித்திருக்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு விசயத்தை கூறியிருந்தார். அதில் அந்த தயாரிப்பாளர் காதில் முடி இருப்பதை வைத்து, காதலில் யாருக்கு அதிகமாக முடிவளரும் என்பதை கூகுளில் தேடிப்பார்த்தேன், ஹாரோன்ஸ் அதிகமாக இருப்பவர்களுக்கு தான் இப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் என்று பதிவிட்டிருந்தார் சமந்தா. இப்படி அவரின் விமர்சனத்திற்கு நடிகை சமந்தா பதிலடி கொடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.