அந்த விஷயத்திலும் சமந்தா தான் நம்பர் 1.. விவாகரத்துக்கு பின் இவ்ளோ கேட்கிறாராமே
Samantha
By Parthiban.A
நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு போல்டாக பல விஷயங்களை செய்து வருகிறார். அவர் படங்களில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த நிலையில் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு மிக கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருந்தார்.
அந்த பாடல் இந்தியா முழுவதும் வைரல் ஆனது. தன்னை அதிகம் கவர்ந்த பாடல் அது என சல்மான் கான் சமீபத்தில் கூறி இருக்கிறார். அந்த அளவுக்கு ஹிட் ஆனது சமந்தாவின் டான்ஸ்.

இந்நிலையில் இந்திய அளவில் ஐட்டம் பாடலுக்கு ஆட அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளை பட்டியலிட்டால் அதில் சமந்தா தான் முதலிடத்தில் இருப்பார். அவர் ஒரு பாட்டுக்கு 5 கோடி ருபாய் கேட்கிறாராம்.
ஐட்டம் டான்ஸ் ஆடும் நடிகைகள் பெறும் சம்பளம் பற்றிய விவரம் இதோ
சமந்தா - 5 கோடி
தமன்னா - 50 லட்சம்
சன்னி லியோன் - 3 கோடி
ஜாக்குலின் - 3 கோடி
கத்ரீனா - 50 லட்சம் (இப்போது உயர்த்திவிட்டார்)