16 பெண்களை வேண்டுமென்றே ஏமாற்றினாரா நடிகர் ஆர்யா!! ரகசியத்தை உடைத்த நடிகை சங்கீதா..

Arya Sangeetha Gossip Today
By Edward Jan 22, 2024 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, கடந்த 2017ல் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 17 வயது வித்தியாசத்தில் காதல் திருமணம் குடும்பத்தினர் சம்மதத்துடன் நடைபெற்றது. சாயிஷாவை திருமணம் செய்வதற்கு முன் நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

16 பெண்களை வேண்டுமென்றே ஏமாற்றினாரா நடிகர் ஆர்யா!! ரகசியத்தை உடைத்த நடிகை சங்கீதா.. | Sangeetha Open Arya Enga Veetu Mapillai Secret

ஆர்யாவுக்காக 16 பெண்கள் போட்டிப்போட்டு கடைசியில் 3 பெண்கள் இறுதி சுற்றுக்கு தேர்வாகினார். ஆனால், ஒருவரை திருமணம் செய்தால் மற்ற இருவரும் கஷ்டப்படுவார்கள் என்று கூறி யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினார். இந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நிகழ்ச்சியை முழுவதும் தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா, அதுகுறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் நிகழ்ச்சி குழுவினரிடம், நிஜமாகவே ஜாமி (ஆர்யா) பண்ணுகிறாரா என்று ஆயிரம் முறை கேட்டிருப்பேன். அதற்கு நிகழ்ச்சி குழுவும், ஆமாம் அவர் அக்ரிமெண்ட்-லாம் கையெழுத்து போட்டிருக்காரு என்று கூறினார்கள். அதேபோல் ஜாமியிடம், உண்மையாகவே நீ பண்றியா என்று கேட்டேன். ஆமாம், நிறைய ரிஜெக்‌ஷன், தோல்விகள் இருந்ததால் எனக்கு இது பிடித்திருக்கிறது என்று கூறினார்.

16 பெண்களை வேண்டுமென்றே ஏமாற்றினாரா நடிகர் ஆர்யா!! ரகசியத்தை உடைத்த நடிகை சங்கீதா.. | Sangeetha Open Arya Enga Veetu Mapillai Secret

அதன்பின் இறுதியில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் அவரால் முடிவெடுக்க முடியவில்லை. ஏனென்றால் ஆரம்பத்தில் நகைச்சுவையாக ஆரம்பித்து கடைசியில் எமோஷ்னலாக மாறிவிட்டதும் இது தப்பாக மாறிவிடும் என்று ஆர்யா மனநிலையை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. அதற்கு மேல் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்று நினைத்தேன்.

அவர் முடிவு எங்களுக்கு தேவை, பதில் சொல்லியே ஆகணும் என்று நிகழ்ச்சி குழு என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் அவர் முடிவில் ஸ்ட்ராங்காக இருந்ததால் அவர் முடிவை ஏற்ற்க்கொண்டோம் என்று சங்கீதா தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய சங்கீதா, நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பிரடொக்‌ஷன் குழுவிடம் நான் பேசிய விசயம், எதுவாக இருந்தாலும் நீங்களே உருவாக்கி, போலியாக இருந்தால் நான் இதில் ஒரு பங்காக இருக்கமாட்டேன். மக்களை ஏமாற்றுவது எனக்கு பிடிக்காது அதை செய்யமாட்டேன் என்று கூறினேன் என சங்கீதா ஓப்பனாக பேசியிருக்கிறார்.