சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 பைனலில் சிவகார்த்திகேயன்!! வேற யாரெல்லாம் வந்தாங்க தெரியுமா?
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 பைனல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வந்த நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாம்ஸ் 4. விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் 6 பேர் இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டனர். ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ், மஹதி உள்ளிட்ட 6 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தயாராகினர்.
மே 11 ஆம் தேதி மாலை 4.30 மணியில் இருந்து நேரு ஸ்டேடியத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இறுதி சுற்றுப்போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.
சிறப்பாக பாடி அசத்திய திவினேஷ் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னராக சிவகார்த்திகேயனால் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இறுதி சுற்று போட்டியின் போது சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்திருப்பதை எல்லோரும் அறிந்த ஒன்று தான்.
சந்தானம் மற்றும் ஆர்யா
ஆனால், இடையில் நடிகர் சந்தானம் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து வந்து போட்டியாளர்களை உற்சாகம் செய்திருக்கிறார்கள். மேலும் வசந்த் & கோவின் உரிமையாளரும் நடிகருமான விஜய் வசந்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
இவர்களை தவிர ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகை நடிகர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.