சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale!! திவினேஷுக்காக சிவகார்த்திகேயன் செய்த செயல்..
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வந்த நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாம்ஸ் 4. விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் 6 பேர் இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டனர்.
ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ், மஹதி உள்ளிட்ட 6 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தயாராகினர். நேற்று மே 11 ஆம் தேதி மாலை 4.30 மணியில் இருந்து நேரு ஸ்டேடியத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இறுதி சுற்றுப்போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். சிறப்பாக பாடி அசத்திய திவினேஷ் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னராக சிவகார்த்திகேயனால் அறிவிக்கப்பட்டார்.
திவினேஷுடன் சிவகார்த்திகேயன்
டைட்டில் அறிவுப்புக்கு முன் திவினேஷுடன் சிவகார்த்திகேயன் நான் ஆணை இட்டால் என்ற பாடலை இணைந்து பாடினார். அதன்பின் எனக்கு ஒரு ஆசை தான் போட்டோ என்று திவினேஷ் சிவகார்த்திகேயனிடம் கேட்க, என்னப்பா என்று அவரும் கேட்டுள்ளார். இதற்கு அர்ச்சனா, சார், நீங்க அவனுக்காக முட்டிப்போட்டீங்க எல்லாம் ஓகே, அந்த குழந்தை உங்களோட போட்டோ எடுக்கணும்னு கேட்குறான் என்று கூறியுள்ளார்.
உடனே சிவகார்த்திகேயன், டேய் தம்பி, நான் உன்னோட செல்ஃபி எடுத்துக்கிறேன்டா, உன்னோட நான் செல்ஃபி எடுத்து ஃபேமஸாகிக்குறேன் என்று சிவகார்த்திகேயன் கூறி செல்ஃபி எடுத்ததோடு, கன்னத்தில் முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டார். இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.