சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 5 டைட்டில் வின்னர் அபிஷேகா!! பரிசு என்ன தெரியுமா..
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. இந்நிகழ்ச்சியின் லிட்டில் சாம்ப்ஸ் 5ன் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நேற்று ஞாயிறு 7ஆம் தேதி ஒளிப்பரப்பானது.

லைவ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், சிறப்பாக பாடிய போட்டியாளர்களில் கடைசி வரை கடுமையான போட்டி நிலவியது.
அபிஷேகா
இதனையடுத்து அபிஷேகா, சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 5ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அரங்கமே கரகோஷத்தில் அதிர, மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க மேடையில் நின்ற அபிஷேகாவுக்கு ரூ. 1கோடி மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது.

தன்னுடைய சிறுவயதில் தனித்துவமான திறமையை வெளிப்படுத்திய அபிஷேகா, சீசன் முழுவதும் தொடர்ந்து சிறப்பான பாடல்களை பாடினார்.
அவரை அடுத்து முதல் ரன்னர் அப் பட்டத்தை விஷ்ணுவர்தன் கைப்பற்றி, ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 2வது ரன்னர் அப் இடத்தினை தன்வி தேர்வு செய்யப்பட்டார்.


