15 வருட சீரியல் வாழ்க்கை!! குழந்தை பெற்ற கையோடு புதுவீட்டில் குடியேறிய சீரியல் நடிகை காயத்ரி..
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருந்து வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ். 19 வயதில் சீரியல் நடிகையாக தென்றல் சீரியலில் நிலா கதாபாத்திரத்தில் நடித்தார் காயத்ரி.
அதன்பின் அழகி, பொண்ணூஞ்சல், பிரியசகி, அரண்மனை கிளி, சித்தி 2, நாம் இருவர் நமக்கு இருவர், மீனாட்சி பொண்ணுங்க, சிந்தாமணி போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
சிறுவயதிலேயே பிரபல டான்சர் யுவராஜை காதலித்து திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார் காயத்ரி. அதன்பின் 12 வயதில் மகனுடன் வாழ்ந்து வந்த காயத்ரி பல ஆண்டுகள் கழித்து இரண்டாம் முறை கர்ப்பமானார்.
கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தையை ஈன்ற காயத்ரி குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். நடிப்பை தாண்டி யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோவை வெளியிட்டு வரும் காயத்ரி, தங்களின் 13 வருட திருமண நாளை இரு குழந்தைகளுடன் கொண்டாடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
தற்போது தான் கட்டிய புதுவீட்டிற்கு குடிபுகுந்துள்ளார். இரு குழந்தைகளுடன் கணவரோடு இணைந்து கிரகபிரவேஷத்தை நடத்தி இருக்கிறார். தற்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.