இரவில் தூங்குபோது அது இருக்கணும்!! மது, புகைக்கு அடிமையாகிய நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..
மலையாள சினிமாவில் சிறுமியாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷகீலா. அதுவும் கவர்ச்சி ரோலில் நடிகர்களுடன் நெருக்கமான பாலியல் காட்சியில் நடித்து கவர்ச்சி புயலாகினார். பின் அதிலிருந்து மீண்டு வந்து தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7ல் கலந்து கொண்டு புகைப்பிடித்த காரணத்திற்காக எலிமினேட் செய்யப்பட்டார்.
சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியின் போது நான் செய்த தவற்றை இல்லை என்று கூறுவதால் என்ன நடக்க போகிறது. நான் செய்ததை ஆமாம் நான் செய்தேன் என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு பயமும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் நான் 13 வயதில் நடிக்க ஆரம்பித்து பணம் சம்பாதித்தால் ஒரு இறுமாப்பு வந்துவிட்டது. அதனால் இன்னொரு நபரின் துணை வேண்டாம் என்று நினைத்து தான் திருமணம் செய்து கொள்ளவில்லை. எல்லாத்துக்கு மேலாக எனக்கு மது மற்றும் புகைப்படம் இருந்ததால் தான் திருமணத்தை வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு தள்ளிவிட்டேன்.
சாதாரணமாக ஆரம்பித்த அந்த பழக்கம் என்னை அடிமையாக்கிவிட்டது. தூங்கும் முன் மது அருந்தினால் தான் தூக்கமே வரும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
இப்படி இந்த கெட்ட பழக்கம் இருக்கும் போது திருமணம் செய்து இன்னொருவரின் வாழ்க்கையை கெடுத்து, மகிழ்ச்சியை கெடுத்து, எதனால் இதை செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தேன் என்று நடிகை ஷகீலா ஓப்பனாக கூறியிருக்கிறார்.