நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கேள்வி கேட்டவருக்கு இப்படியொரு பதிலை கொடுத்த நடிகர் சிம்பு...
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பெருமையுடன் அழைத்து புகழப்பட்டு வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த சிம்பு தற்போது டாப் நடிகராக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் பல சர்ச்சைகளிலும் காதல் விஷயங்களிலும் சிக்கி வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். இடையில் ஆன்மீகம் என்று கூறி கோவில்களுக்கு சென்று வந்தார்.
தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் Thug Life படத்திலும் சிம்புவின் 48 வது படத்தில் நடித்து வருகிறார். அதற்காக மும்முரமாக வேலை செய்து வரும் சிம்பு எப்போது திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்விகளும் இடையில் எழுந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சிம்புவிடம், நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சிம்பு, முதலில் இந்த உலகத்தில் நல்லது எது? கெட்டது எது? என்று லிஸ்ட் போட்டு கொடுங்கள். ஏனென்றால் நல்லது என்ன கெட்டது என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஏன் யாருக்குமே தெரியாது. பின் எதுக்கு என்கிட்ட மட்டும் கேட்கிறீர்கள்?.
கொலை பண்ணுவது தப்பு தானே, அது தப்புன்னு தெரியும். பின், ஏன் கொலை பண்ற? அப்படின்னு கேட்கலாம். சரி தப்பு தான். சின்ன குழந்தையை ஒருத்தன் குத்தி கொலை பண்ணப்போறான், அவன தடுத்து அந்த குழந்தையை காப்பாத்துறதுக்காக அவனை கொலை பண்றது ஒரு தப்பா?.
அப்படி என்றால் எதுவும் சரி கிடையாது, தப்பும் கிடையாது. எதுவும் நல்லது கிடையாது, எதுவும் கெட்டதும் கிடையாது. கடவுளும் இல்லை, ஆவியும் இல்லை, எல்லாமே இங்கு ஒன்று தான். சூழ்நிலைக்கு ஏற்ப நீ நல்லவனா இருக்கனும் என்றால் அந்த சூழ்நிலைக்கு நீ நல்லவனாவே இரு. சூழ்நிலைக்கு நீ கெட்டவனா இருக்கனும் என்றால் கெட்டவனா மாறிவிடு, இதுதான் வாழ்க்கை என்று கூறியிருக்கிறார் நடிகர் சிம்பு.