ஆண்ட்ரியா அதை கெடுத்துவிட்டார்..பலவேலைகள் செய்கிறார்.. பாடகி சுசித்ரா ஆதங்கம்..
சினிமாவில் தற்போது பரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று பாடகி சுசித்ரா நட்சத்திரங்கள் பற்றி சர்ச்சையாக பேசுவதுதான். சமீபத்தில் வைரமுத்துவின் கேரக்டர் எப்படி என்று வெளிப்படையாக பேசியிருந்தார். தற்போது பாடகியும் நடிகையும் ஆண்ட்ரியா குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஆண்ட்ரியா
மேடையில் பாடும் கலாச்சாரத்தையே ஆண்ட்ரியா கெடுத்துவிட்டார். அவர் பாடும்போது கேமரா முன் வந்து ஆடுவது போன்ற வேலைகளை செய்கிறார். அதெல்லாம் ரொம்ப மோசம். அவர்களை போன்றோர் மேடையில் பாடுவதால் தான் என்னைப்போன்ற கூச்சம் உடையவர்களுக்கு மேடையில் பாடல் பாடுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.
அவரைப்போல் மேடையில் பாடமுடியாது, அவர் பாடுவது மட்டுமில்லாமல் மேடையில் பல வேலைகளை செய்கிறார். அவர் பாடுவதை கேட்கவா வருகிறார்கள்? அவரை பார்க்கத்தான் செல்கிறார்கள்.
மேடையில் பாடவேண்டுமென்றாலே அப்படி இருக்க வேண்டும் என்று உருவாகிவிட்டதால் நாங்கள் எல்லாம் எப்படி பாட முடியும். மக்களும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள். மேடையில் பாடும் போது பாடகிகளின் ஆடைகளும் ரொம்பவே மோசமாக இருக்கிறது.
முக்கியமாக ஆண்ட்ரியா பாடும்போது எல்லோரும் என்னை பாருங்கள் என்று சொல்வது போல் பாடுகிறார். அந்த பளபளப்பு, போலித்தன்மையைத்தான் மக்களும் விரும்புகிறார்கள் என்று பாடகி சுசித்ரா விமர்சித்துள்ளார்.