என்னையும் தனுஷையும் பிரித்தது அந்த நபர் தான், சுசீத்ரா உடைத்த உண்மை
சுசித்ரா
சுசித்ரா இந்த பெயர் ஒரு காலத்தில் ஒட்டு மொத்த கோலிவுட்டையும் அதிர வைத்தது. சுசீ லீக்ஸ் என்ற பெயரில் இவர் வெளியிட்ட தகவல்கள், போட்டோக்கள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுசித்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில் அந்த போட்டோக்களை வெளியிட்டது நான் இல்லை, என் கணவர் கார்த்திக் குமார் தான் என்று கூறியுள்ளார்.
தனுஷுடன் நட்பு விரிசல்
மேலும், நானும் தனுஷும் நல்ல நண்பர்களாக தான் இருந்தோம். அவர் என்னிடம் நன்றாக பேசுவார், ஒருநாள் நான் யோகா க்ளாஸ் சென்றேன்.
அப்போது அந்த யோகா டீச்சர் சௌந்தர்யா ரஜினிகாந்த் நிச்சயதார்த்தம் நீ போகலையா என்றால், நானோ, எனக்கு அந்த குடும்பத்தில் தனுஷ் தவிற வேறு யாரையும் தெரியாது என்றேன்.
ஆனால், அங்கிருந்த பூர்ணிமா என்ற நபர் நான் சொன்னதை எப்படி சொன்னார் என்று தெரியவில்லை, தனுஷ் அன்றிலிருந்து எதுவும் என்னிடம் பேசுவதில்லை.
கேட்டதற்கு, கடவுள் எனக்கு யார் நல்லவர்கள் என்று காட்டி விட்டார் என கூறினார், என்று சுசித்ரா அதில் தெரிவித்துள்ளார்.