உயிரை மாய்த்துக்கொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி!! இதுதான் காரணம்?
Tamil TV Serials
Actress
Siragadikka Aasai
By Edward
நடிகை ராஜேஸ்வரி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராஜேஸ்வரி. தற்போது ஒளிப்பரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த ராஜேஸ்வரி, சென்னை பிராட்வேயில் உள்ள வீட்டில் தன் கணவருடன் வசித்து வருகிறார்.

சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட, கடந்த 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சைதாப்பேட்டையிலுள்ள தாய் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுள்ளார்.
குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்தவர், தாயின் பிபி மாத்திரையை அதிகளவு உண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி டிசம்பர் 12 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி தன்னுடைய 39 வயதில் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.