பலகோடி கடன்.. பலான சர்ச்சை!! 10 வருட வளர்ச்சிக்கு பின் தளபதி இடத்திற்கு அச்சாரம் போட SK..
சிவகார்த்திகேயன்
சின்னத்திரை தொகுப்பாளராக பணியாற்றி பின் 2012ல் வெளியான மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகினார் சிவகார்த்திகேயன். இப்படத்தினை தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், ரஜினி முருகன், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களால் தமிழ் சினிமாவில் தனக்கான இரு அங்கீகாரத்தை பெற்றார் சிவகார்த்திகேயன்.
இதனை தொடர்ந்து நடிப்பை தாண்டி பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மையை காட்டி அசத்தி வரும் சிவகார்த்திகேயன் 10 ஆண்டுகளில் பல பிரச்சனைகள் தோல்விகள் சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அதிலும் ஒருசில படங்களில் தோல்வியால் பல கோடியில் கடனில் சிக்கினார்.
சமீபத்தில் வெளியான அயலான் படத்தின் ரிலீஸின் போது ஏற்பட்ட 85 கோடி கடன் சுமையை தாங்கி பிடித்து வந்தார். இதற்கிடையில் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்டுட இணைத்து பேசப்பட்ட செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தளபதி இடத்திற்கு அச்சாரம்
இந்த விஷயம் சிவகார்த்திகேயனின் கேரியரை ஆட்டம் காணும் அளவுக்கு சென்ற நிலையில் அவருக்கு இந்த விஷயம் ஆராத்தழும்பாக மாறிவிட்டது. தனக்கென ஒரு இடத்தை பிடிக்கவே கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்தும் இருக்கிறார். மேலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தையும் நடப்பதாக கூறப்படுகிறது.
குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சியை பலரும் பாராட்டி வரும் நிலையில், கோட் படத்தில் தன்னுடைய தளபதி பொறுப்பை நீ பார்த்துக்கொள் என்பது கூறும்படியான காட்சி அமைந்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. நாசுக்காக கோட் படத்தில் விஜயே அப்படியொரு காட்சியை வைக்கச் சொன்னது தான் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது.