எஸ்.பி.பி மகனுடன் நடிகை சோனியா அகர்வால் இரண்டாம் திருமணமா..! வெளிவந்த ஜோடியின் புகைப்படம்
7ஜி ரயின்போ காலனி, புதுப்பேட்டை, மதுர, கோவில் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், இருவரும் இடையே ஒத்துப்போகாத காரணத்தினால், இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இதன்பின், தற்போது படங்கள் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால்.
இந்நிலையில், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மகனின் பின்னணி பாடகருமான எஸ்.பி.பி சரணுடன், சோனியா அகர்வால் நெருக்கனாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறார்களா என்று கேள்வி எழுப்ப துவங்கிவிட்டனர். ஆனால், இந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்த புகைப்படம் வெப் சீரிஸ்-காக எடுக்கப்பட்டது.
அதில், எஸ்.பி.பி சரண், சோனியா அகர்வால், அஞ்சலி, சந்தோஷ் என பலரும் நடிக்கிறார்கள் என்றும் எஸ்.பி.பி சரண் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்முலம், இந்த வதந்திக்கு முடிவு வந்துள்ளது.