சூப்பர் சிங்கர் ஜெசிக்காவா இது!! வாய்ப்பில்லாமல் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க..
Super Singer
Vijay Television
By Jai
சூப்பர் சிங்கர் சீசன் 4ல் இரண்டாம் இடம்பிடித்தவர் கனடா வாழ் ஈழச்சிறுமி ஜெசிக்கா. SSJ4 நிகழ்ச்சியில் தன் காந்த குரலால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 2ஆம் இடத்தினை பிடித்தார்.
இறுதி சுற்றில் அவர் பாடி பாடல் அனைவரையும் உருக வைத்ததோடு மிரம்மிக்க வைத்தது.

இரண்டாம் இடத்தை பிடித்து 1 கிலோ தங்கத்தை பெற்ற ஜெசிக்கா அந்த தங்கத்தை தமிழக மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்திருந்தார் ஜெசிக்கா.
அதன்பின் ஒருசில பாடல்களை திரைப்படங்களில் பாடி வந்தவர் கனடாவிற்கு சென்றுவிட்டார்.
அங்கு கிடைக்கும் கச்சேரிகளில் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து பங்கு பெற்றும் வருகிறார்.
தற்போது ஜெசிக்கா ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நம்ம ஜெசிக்காவா இது என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

