சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 முதல் இறுதி சுற்று போட்டியாளர்!! யார் தெரியுமா..
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிரியங்காவும் மாகாபா ஆனந்தும் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு வருகிறார்கள்.
இப்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ன் இறுதி சுற்று போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்யும் போட்டி நடக்கவுள்ளது. அதற்காக இந்த வாரம் One on One Battle ரவுண்ட் நடந்துள்ளது.
அதில் 90 செகண்ட்டில் யார் நடுவர்களை கவர்கிறார்களோ அவர்கள் தான் ஃபைனலிஸ்டாக தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆத்யா - காயத்ரி
அப்படி போட்டிப்போட்ட ஆத்யா - காயத்ரி இருவரில் முதல் இறுதி சுற்று போட்டியாளராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு வந்த நிலையில், சிறப்பாக பாடிய ஆத்யா முதல் இறுதி சுற்றுப்போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆத்யாவிற்கு பாடகி சித்ரா, டிக்கெட் டூ ஃபினாலே ஷீல்லை கொடுத்து கெளரவித்துள்ளதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.



