ஆணவத்தில் இளையராஜாவையே அசிங்கப்படுத்திய பிரபல நடிகை! கையேந்தி கைக்கட்டி நிற்கவைத்த இசைஞானி..

musicdirector ilaiyaraaja pSusheela isangani
By Edward Mar 18, 2022 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இசைஞானியாக இருக்கும் இளையராஜா 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இசைஞானி பாடல் என்றாலே தனித்துவமான இரு ஈர்ப்பினை ரசிகர்கள் மத்தியில் கொடுத்து வருகிறது. இவர் இசையை புகழாதவர்களே கிடையாது.

அப்படி பெருமையாக பேசக்கூடிய இளையராஜாவின் சில செயல்கள் பலரை காயப்படுத்தியும் வந்திருக்கிறது. தன் பாடலை யாரும் தன் அனுமதியின்றி ராயல்டி பெறாமல் மேடை நிகழ்ச்சியில் பாடக்கூடாது என்ற ஆணவம் கொண்டு இருப்பவர். எஸ்பிபி, ரகுமான், கங்கை அமரன், சங்கர், மணிரத்னம் உள்ளிட்ட பலரிடம் இந்த செயல்களை செய்து சர்ச்சையிலும் சிக்கினார் இளையராஜா.

தலைக்கனத்தில் இருந்த இளையராஜாவையே, அவர் வளர்ந்த காலகட்டத்தில் பிரபல நடிகை ஒருவரால் அசிங்கப்படுத்தப்பட்டு வெளியே அனுப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளதாம்.

இளையராஜா முன்னணி இசையமைப்பாளரிடம் வேலை செய்த போது பின்னணி பாடகி பி. சுசிலா அவர்கள் பாட வந்துள்ளது. அப்போது அங்கிருந்த இளையாராஜாவின் உருவத்தை பார்த்து முகம் சுளித்துள்ளாராம். அவரை பார்த்தால் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது வெளியே போக சொல்லுங்கள் என்று இசையமைப்பாளரிடம் கூறியிருக்கிறார் சுசிலா.

அதற்கு இசையமைப்பாளரும் இளையராஜாவை வெளியில் அனுப்பி பாடலை கம்போஸ் செய்துள்ளனர். அப்படி தலைக்கனத்தில் இருந்த நடிகையை எண்ணிய இளையராஜா சங்கடத்திற்குள்ளாகினாராம். அதன்பின் இளையராஜா பெரிய உச்சத்தை தொட்ட பிறகு பி, சுசிலா இளையராஜாவை தேடி வந்து மன்னிப்பு கேட்டு வாய்ப்பினையும் கேட்டுள்ளாராம்.

ஒருவரின் உடல் தகுதியை வைத்து யாரையும் எப்படிப்பட்டவர் என்று நினைத்துவிட கூடாது என்பதற்கு இளையராஜா ஒரு உதாரணமாக திகழ்ந்துள்ளார் என்பது தான் உண்மை.