மூன்றே நாளில் விஜய் ஷூட்டிங்கில் இருந்து தெறித்து ஓடினேனா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை திரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. 90களில் கொடிக்கட்டி பறந்து தற்போது மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்து வருகிறார் திரிஷா.
அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு வந்த திரிஷா சில காலம் காதல் தோல்வி, நின்று போன திருமணம் என்ற பிரச்சனைகளில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்தார்.
அதன்பின் 96 படத்தில் நடித்து தன்னுடைய கனவுக்கன்னி என்ற இடத்தை தக்கவைக்க பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து நிரூபித்தார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த திரிஷா, விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் கமிட்டாகினார்.
லியோ என்று பெயரிடப்படும் இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் காஷ்மீரில் ஆரம்பமானது. படப்பிடிப்பிற்கு படக்குழுவினருடன் தனிவிமானத்தில் பறந்த திரிஷா நடித்த மூன்றே நாளில் சென்னைக்கு திரும்பி வந்துவிட்டார் என்ற செய்தி பரவியது.
மூன்றே நாளில் ஏன் லியோ படத்தில் இருந்து தெறித்து ஓடினார் என்ற கேள்வி வைரலானது. ஆனால், கடும் குளிர் காரணமாக திரிஷாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சென்னை வந்ததாக கூறப்பட்டது.
ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்று நடிகை திரிஷாவின் அம்மா உமா கூறியுள்ளார். திரிஷா லியோ படத்தில் இருந்து விலகியது உண்மையில்லை என்றும் குளிர் காரணமாக சென்னை வரவில்லை காஷ்மீரில் நடக்கும் ஷூடிங்கில் தான் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
@trishtrashers Instagram Story from Kashmir 😃#Leo #Trisha pic.twitter.com/LfenSRF6wU
— ✨ Monster Of Thalapathy ✨ (@_Sam_King_) February 8, 2023
இந்நிலையில், நடிகை திரிஷா நான் படத்தில் இருந்து ஓடவில்லை காஷ்மீர் ஷூட்டிங்-ல் தான் இருக்கிறேன் என்று காஷ்மீரில் எடுத்த பனி பிரதேச வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீ நகரில் இருக்கும் Heritage Luxury ரெசாட்டில் திரிஷா மேகி சாப்பிட்ட புகைப்படத்தையும் விமானத்தில் வேறொரு இடத்திற்கு செல்லும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.