கமலை வைத்துக்கொண்டே ரஜினியை கோபமாக திட்டிய கே.பாலசந்தர், இதற்காக தானாம்

rajini kamal
By Tony Aug 10, 2021 02:43 AM GMT
Report

ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதும் பல லட்சம் தமிழர்களால் கொண்டாடப்படும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் தயாராகி வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகின்றது, இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது புகைப்பிடிப்பதையே விட்டுவிட்டார்.

ரஜினி ஆரம்பக்காலத்தில் தொடர்ந்து புகைப்பிடித்துக்கொண்டே இருந்தாராம், அவரால் படப்பிடிப்பில் கூட புகைப்பிடிக்க முடியாமல் இருக்க முடியாதாம்.

அந்த வகையில் ஒரு நாள் கே.பாலசந்தர் ரஜினி, கமல் இருவரையும் வைத்து படம் எடுத்துக்கொண்டிருக்க, கமலுக்கான காட்சி எடுத்தார்களாம்.

ரஜினி நமக்கு தான் காட்சி இல்லையே என்று தம் அடிக்க செல்ல, உடனே கே.பி ரஜினியை அழைத்து, “என்ன தம் அடிச்சீயா” என்று கேட்க, ரஜினி தயங்கிக்கொண்டே ’ஆம்’ என்றாராம்.

உடனே, கே.பி “கமல் நடிக்கும் போது ஒழுங்காக இங்க இரு, அப்போது தான் உனக்கு நடிப்பு வரும்” என்று சொல்ல, அன்றிலிருந்து ரஜினி, கமல் நடிக்கும் போது வெளியவே செல்ல மாட்டாராம்.