அவருடைய சவகாசமே வேண்டாம்? வடிவேலுவின் அதிரடி முடிவு...

Vadivelu Shankar Lyca Naaisekar
By Edward Sep 12, 2021 11:55 AM GMT
Report

தமிழ் சினிமாவின் வைகைபுயல் என்ற பெயரோடு தமிழ் மக்களை தாண்டி வெளிநாட்டு மக்களையும் ரசிக்க வைத்து வந்தவர் நடிகர் வடிவேலு. பல ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடிக்க தடை விதித்து தற்போது நாய் சேகர் படத்தில் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுவாரஷ்யமான கேள்விகளுக்கு காமெடியாக பதிலளித்துள்ளார். ஒரு நோயாளி மருத்துவரை பார்த்து தூக்கமில்லை என்று கூறியுள்ளார்.

அதற்கு மருத்துவர் சர்க்கஸ் சென்று காமெடியை ரசியுங்கள். சர்க்கஸில் நான் தான் பாபூன் என்று கூறியுள்ளார் நோயாளி. அப்படித்தான் இருக்கு என் வாழ்க்கை.

மேலும் என் மேல் வைக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய் எனவும் எனக்கு ரெட் கார்டு எதுவும் போடப்படவில்லை எனவும் தெரிவித்தார். இனிமேல் சங்கருடன் எந்த பழக்கமும் வைத்துக்கொள்ள மாட்டேன் இனி வரலாற்று படங்களில் நடிப்பதை விட மக்களுக்கு பிடித்த காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.