செருப்பால அடிப்பேன்..பிரியங்காவின் கேரக்டரை அப்படி பேசுபவர்களால் கோபப்பட்ட நடிகை வனிதா..
மணிமேகலை - பிரியங்கா
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் நடந்த பிரச்சனை தான் தற்போது சமுகவலைத்தளங்களில் பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறார். பிரியங்காவை பற்றி விமர்சித்தாலும் சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சீண்டும் விதத்தில் பேசுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
[
நடிகை வனிதா
பிரியங்கா மணிமேகலை குறித்த தகவல்களை பலர் இணையத்தில் பேசி வரும் நிலையில், நடிகை வனிதா செய்தியாளர்களை சந்தித்து இந்த பிரச்சனை குறித்து பேசியிருக்கிறார்.
அதில், மணிமேகலை அவருடன் கணவருடன் வாழ்கிறார், அதனால் அவருக்கு சுயமரியாதை இருக்கிறது என்றும் பிரியங்கா கணவர் விட்டுட்டு போய்ட்டாரு அதனால் அவருக்கு சுயமரியாதை கிடையாது என்று கூறுவபவர்களை செருப்பு இல்லை எதைவேணாலும் அடிக்கலாம், ரொம்ப தப்பு.
அதனால தான் அவங்க கணவர் விட்டுட்டு போய்ட்டாங்கன்னு சிலர் பேசுறாங்க. கணவர் விட்டுட்டு போகல, இருவரும் பிரிந்துவிட்டார்கள். எந்த காலத்தில் இருக்கிறீர்கள். பிரிவுக்கும் கேரக்டருக்கும் சம்மந்தம் கிடையாது.
அந்த பெண்ணின் குணத்தை கொலை செய்து சோசியல் மீடியாவில் பேசி நிறைய விஷயங்கள் நடக்கும் போது அதை பார்த்துக்கிட்டு, அதை ரசித்து அதற்கான வீடியோவை மணிமேகலை போடுவது தப்பு.
நீ வளர்ந்து வர பெண், நம் கண் முன் ஒரு பெண்ணின் கேரக்டரை தப்பாக பேசுவதை சப்போர்ட் செய்ய வேண்டாம் என்று மணிமேகலை கண்டித்து பேசியிருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார்.