கண்டுக்கொள்ளாத ரஜினி, விஜய், அஜித்!! லட்சக்கணக்கில் கொடுத்த சூர்யா, ஜோதிகா..
இந்தியா முழுவதும் சில தினங்களுக்கு முன் மிகப்பெரிய துயத்துக்குள்ளாக்கி விஷயம் தான் வயநாடு நிலச்சரிவு சம்பவம். யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஏற்பட்ட நிலச்சரிவால் 340க்கும் மேற்பட்டவர் இதுவரை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று பார்த்தும் உதவியும் செய்து வருகிறார்கள்.
இதற்காக கேரளா அரசும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீட்பு பணிகள் பல நாட்களாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண பணிகளுக்காக நிதி கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடுள்ளது. நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாய் உதவியிருக்கிறார்.
நடிகர் கமல் ஹாசன் 25 லட்சமும், சூர்யா 25 லட்சம், கார்த்தி 15 லட்சம், ஜோதிகா 10 லட்சம், ராஷ்மிகா மந்தனா 10 லட்சமும் கொடுத்துள்ளனர். கேரளாவை சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடிகைகளும் நிதியுதவி கொடுத்துள்ளனர்.
ஆனால் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த ரஜினி, விஜய், அஜித் சார்பில் இதுவரை எந்த உதவியும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இத்தனைக்கும் கேரளாவில் மூன்று பேரின் ரசிகர்கள் ஏகப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அமைதி காப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலபை ஏற்படுத்தி இருக்கிறது.