விஜய் ரசிகர்களை விரட்டியடித்த போலிஸார்...இதே வேலையா போச்சு
விஜய் படம் வருகிறது என்றாலே தமிழகமே திருவிழா போல் இருக்கும். ஏனெனில் ரஜினிக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர் என்றால் தற்போது விஜய் தான்.
ஏன், ரஜினியையே தாண்டி இன்று பெரிய இடத்திற்கு விஜய் சென்றுவிட்டார், இந்நிலையில் விஜய் படமான பீஸ்ட் இன்னும் இரண்டு தினங்களில் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர், ஒரு பக்கம் கட் அவுட் பேனர் என்றும் அமர்க்கள படுத்தி வருகின்றனர்.
ஆனால், பாண்டிச்சேரியில் விஜய் கட் அவுட் வைக்க அனுமதி இல்லை என்று அடித்து துரத்தியுள்ளனர் போலிஸார், இப்படி விஜய் படம் வரும் போது தான் இவர்கள் கண்கள் தெரியும் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
புதுச்சேரி - வில்லியனூர் : நடிகர் விஜய் பட கட்-அவுட்களை புல்டோசர்களை கொண்டு நள்ளிரவில் அகற்றிய போலீசார்
— DON Updates (@DonUpdates_in) April 10, 2022
விஜய் மக்கள் இயக்கத்தினர் போலீசாருடன் வாக்குவாதம் pic.twitter.com/GjlKW7SSNQ