ஆதவனுடன் நடிகை விலாசினியுடன் 2வது திருமணமாகி குழந்தை இருக்கா!! வீடியோ
ஆதவன்
மிமிக்ரி கலைஞருமான ஆதவன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் நிலையில், கச்சேரிகளில் பாடியும் வருகிறார். ஆதவனுக்கும் பாடகியும், டப்பிங் கலைஞரும் நடிகையுமான விலாசினிக்கும் திருமணாகிவிட்டதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் பரவியது. அதற்கு காரணம், விலாசினி தன்னுடைய கைக்குழந்தையுடன் ஆதவனோடு ஜோடியாக புகைப்படம் எடுத்துக் கொண்டதை இணையத்தில் பகிர்ந்தது தான்.

குழந்தையின் முதல் பிறந்தநாள் போட்டோ என்று சொல்லி பகிர்ந்ததை பலரும் பார்த்து, எப்போ உங்களுக்கு கல்யாணமாச்சு உங்கள் குழந்தையா? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
2வது திருமணம்
ஆதவன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். விலாசினியும் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அப்படி இருக்கும் போது இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களோ என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு விலாசினி, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் லைவில் வந்து, ஏராளமானோர் உங்களுக்கும் ஆதவனுக்கும் 2வது திருமணம் நடந்துவிட்டதா என்று கேட்கிறீர்கள், எனக்கு இரண்டாம் திருமணமாகவில்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

குழந்தை
இந்நிலையில் தற்போது விலாசினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், விலாசினியின் தாயார், குழந்தையை தூக்கி கொஞ்சுகிறார். அந்த வீடியோவில், ’மீரா ஆதவன்’ என்ற ஹாஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.
இதைபார்த்த ரசிகர்கள் ஆதவனுடன் இரண்டாம் திருமணமாகவில்லை என்று கூறிவிட்டு குழந்தைக்கு ஆதவன் பெயரை சேர்த்து குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் விலாசினி.

ஆனால் இருவருக்கும் திருமணமாகி குழந்தை பிறந்ததை அடுத்து, சில மாதங்களுக்கு முன் தங்களின் குழந்தையின் முதல் பிறந்தநாளை இருவரும் பிரமாண்டமான முறையில் நடத்தியுள்னர். அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

