நீ செத்துடுவன்னு சாபம் விட்டவர்!! யாருன்னு சொன்ன பார்த்திபன்..
பார்த்திபன்
இயக்குநர் பார்த்திபன், மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி அஞ்சலி நடந்தபோது தனக்கு சாபம் விட்ட நபர் குறித்து பேசியிருந்தார். பாக்யராஜ் சார் அஸ்தியை கரைத்துவிட்டு வீட்டிற்கு வந்தால் இரவு 10 மணிக்கு அவரின் உதவியாளரிடம் இருந்து மெசேஜ் வந்தது. நீ விரைவில் செத்துடுவ, ஆனால் உனக்கு கூட்டம் வராதுன்னு அதில் இருந்தது.

அதை பார்த்து ரொம்ப கஷ்டமாக இருந்தது. எப்படி ஒரு குடும்பஸ்தனாக இருக்க முடியும். மற்றவர்களை எப்படி பார்ப்பார், மெய் மறந்து வேல செய்ததற்காக இப்படிப்பட்ட வார்த்தைகளா? என்னை நேரில் வந்து அறைந்திருக்கலாம்.
நான் இறந்தப்பின் எனக்கு கூட்டம் வருமா? வராதான்னு எனக்கு எப்படி தெரியும்? இந்த சாபம் முட்டாள்தனமாக இருக்கிறது. உங்களுக்கு சாபம் விட்டது யாரெண்டு சொல்லுங்கள் என்றார்கள் என் உதவியாளர்கள். அந்த நபர் என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு 10 சேனல்களில் என்னை பற்றி தவறாக பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நீ செத்துடுவன்னு சாபம் விட்டவர்
அந்த மெசேஜை அனுப்பியது யாரென்று தனக்கு தெரியாதது போல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து என்னால் தாங்க முடியவில்லை. அவர் என்னைப்பற்றி நிறைய குறைகள் சொல்லி இருக்கிறார். துணை முதல்வர் படத்தை தொகுத்து வழங்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த பார்த்திபன் வரவில்லை என்றார்.
என் முன்னாள் மனைவி சீதா அந்த படத்தில் நடித்திருக்கிறார். அவர் வருவது தெரிந்ததால் நான் வரவில்லை, நாங்கள் சகஜமாக பிரிந்துபோன தம்பதி கிடையாது, அதனால் நான் வரல சார் என்ரு இயக்குநரிடம் சொன்னேன். எங்கள் டைரக்டருக்கு நெருங்கிய நண்பராக இருந்தாலும் ஒன்றரை மாதங்களுக்கு முன் அவரைப் பற்றி மோசமாக பேசினார்.

பாக்யராஜ் என் வாழ்க்கையை கெடுத்துவிட்டான் என்று அந்த பேட்டியில் சொன்னார் சுந்தர்ராஜன், நாங்கள் இருவரும் ஒன்னா வந்துதான் முயற்சி செய்தோம். ஒருநாள் சொல்லாமல் கிளம்பிவிட்டான், நான் நன்றாக வந்துவிடுவேனோ என்கிற பயத்தில் விட்டுட்டு போயிட்டான்.
அந்த கோபம் எனக்கு இருந்தது. நான் இயக்குநராக ஆன பின் கோபம் தீர்ந்தது. இப்படிப்பட்ட ஒருத்தரிடம் நிரந்தர தலைவர் பாக்யராஜ் என்று எப்படி தோணும், இதை நான் அவரிடம் சொல்லவில்லை. 10 இடத்தில் என்னைப்பற்றி மோசமாக பேசி வருகிறார் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.