ஒரு நாளைக்கு ஒரு லட்சம்!! அதை காட்டு, இதை காட்டுன்னு வெறிப்பிடித்த நாய்கள் மாதிரி.. கொந்தளித்த நடிகை பனிமலர்..
சினிமாத்துறையில் நடிக்கும் நடிகைகளுக்கு பல இடங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் மற்றும் பாலியல் ரீதியான சீண்டல்களை அனுபவித்து வருகிறார்கள். பிரபலமான நடிகைகளுக்கே அப்படி என்றால் சாதாரண பெண்களுக்கு தினமும் பல அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லைக்கள் நடந்து கொண்டு தான் வருகிறது. அப்படிதான் நடிகை பனிமலர் பிரபலமான பின் தனக்கு நடந்த ஒரு கொடுமையான விசயத்தை பகிர்ந்திருக்கிறார்.
திருநெல்வேலியில் ஒரு கடைத்திறப்பு விழாவுக்கு வருகை தர தன்னுடைய குழுவிடம் பேசியிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு ஜார்ஜ் வாங்குவாங்க என்றும் கேட்டுள்ளனர். மேலும், ஒரு லட்சம் தருகிறோம், வந்து தங்க சொல்லுங்க என்று அவர்கள் கூறியதும் தன்னுடைய டீம் அப்படியே பிளாக் செய்துவிட்டார்கள்.
இதை தவிர, நேரலையில் அதுவும் நள்ளிரவில் வீடியோ கால்கள் மற்றும் தேவையில்லாத மெசேஜ்கள் வரும் என்றும் இன்னும் சிலர் சமுகவலைத்தளங்களில் வந்து அதை காட்டு, இதை காட்டு, போட்டோ அனுப்பு என வெறிப்பிடித்த நாய்கள் மாதிரி திரிகிறார்கள்.
அப்படி விரக்தியாக இருக்கிறீர்கள் என்றால் இதற்கென்றே நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்க்ளிடம் தாராளமாக பணம் கொடுத்து போங்கள், உங்கள் இஷ்டம். உங்களுக்கு வக்கு இருந்தால் முறையாக காதலித்து திருமணம் செய்து எதையாவது செய்யுங்கள்.
ஊரில் இருக்கும் பெண்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்றும் பொது தளத்தில் அசிங்கமாக பேசும் வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
டெக்னாலஜி வளர்ந்திருக்கும் நிலையில் பெண்களின் பாதுகாப்பும் வளர்ந்துவிட்டதால் உங்களை தூக்குவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் வக்கிரம் பிடித்த ஆண்களிடம் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பனிமலர் பதிலடி கொடுத்திருக்கிறார்.