அப்படி சொல்லும்போது கண்ணீர்விட்டு அழுதிருக்கேன்..ஆனா இப்போ!! நடிகை ஸ்ரீலீலா எமோஷனல்..
நடிகை ஸ்ரீலீலா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஸ்ரீலீலா, நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் சில நாட்களுக்கு முன் ரிலீஸான உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

கண்ணீர்விட்டு அழுதிருக்கேன்
சமீபத்தில் ஸ்ரீலீலா அளித்த பேட்டியொன்றில் ட்ரோல்களால் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறேன் என்று கூறியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், சமூகவலைத்தளங்களில் தன்னைப்பற்றி வெளியாகும் கடுமையான ட்ரோல்களால் மனமுடைந்து பலமுறை கண்ணீர்விட்டு அழுததுள்ளேன். என்னால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாது அம்மா என்று கூறினேன். சினிமா போதும் அம்மா. நான் படிக்க போகலாம் என்று இருக்கிறேன் என அம்மாவிடம் கூறியிருக்கிறேன்.
ஆரம்பத்தில் எதிர்மறை விமர்சனங்களால் காயமடைந்தாலும் தற்போது எதை ஏற்கவேண்டும், எதை புறக்கணிக்க வேண்டும் என்ற பக்குவம் வந்துவிட்டதாகவும் நடிகை ஸ்ரீலீலா பகிர்ந்துள்ளார்.