52 வயதில் பெற்றுகொண்ட பெண் குழந்தை? திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை ரேவதி

tamilactress revathi mahee
By Edward Jul 10, 2021 07:15 AM GMT
Edward

Edward

Report
210 Shares

தமிழ் சினிமாவில் 1980களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரேவதி. சினிமா வாய்ப்பிறக்க தமிழகம் வந்து படவாய்ப்புகள் பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் கார்த்தி, பிரபு என அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார். தன் சிறப்பான நடிப்பின் மூலம் ஜந்து முறை ஃபிலிம் ஃபேர் விருதினை பெற்ற ஒரே நடிகை என்ற பெருமையும் பெற்றவர்.

இதையடுத்து பிரபல ஒளிப்பதிவாளராக இருந்து புகழ்பெற்ற சுரேஷ் மேனனை காதலித்து 1988ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து 2002ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து குழந்தையில்லாமல் இருந்த ரேவதிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்துள்ளது என தகவல் பரவியது. கணவரிடன் பிரிந்து வாழ்ந்த நிலையில் எப்படி குழ்ந்தை என்ற சர்ச்சையும் ஏற்பட்டது. அவரது குழந்தையா? இல்லை தத்து குழந்தையா? என்று பலர் குழம்பி வந்தனர். இந்நிலையில் நடிகை ரேவதி அதற்க்கான பதிலை ஒரு மேடையில் குறிப்பிட்டு கூறியிருந்தார்.

ஆம் நான் குழந்தை பெற்றுள்ளேன் தான் அது டெஸ்ட் டீயூப் குழந்தை தான் என்று ரகசியத்தை உடைத்தெறிந்தார். தற்போது அவரின் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGallery