கணவராக இருந்தாலும் இப்படியா? அமலா பால் செயல்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
அமலா பால்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
பின் விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆடு ஜீவிதம் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
இப்படியா?
இந்நிலையில், திருமணத்திற்கு பின் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால், தற்போது தன் கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அந்த போட்டோவில் அமலா பால், தனது கணவர் மீது காலை போட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் கணவராக இருந்தாலும் இப்படியா? என்று கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.