இரட்டை குழந்தை இருக்கும் நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விவாகரத்தா!! பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்...
தென்னிந்திய நடிகைகளின் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு விக்னேஷ் சிவனை 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து நான்கு மாதங்களுக்கு பிறகு இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றார்.
அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய முன்னேற்றத்திற்கு தன் கணவர் விக்னேஷ் தான் காரணம் என்று கூறி வந்தார்.
தற்போது ஜோதிடர் வேணு சாமி என்பவர், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் பிரிவார்கள் என்றும் அது நடக்கவில்லை என்றால் ஜோதிடத்தை விட்டு விடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.
இவர் இப்படி பேசியது சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இரட்டை குழந்தை இருக்கும் நிலையில் இவர்கள் பிரியப் போகிறார்கள் என்று ஜோதிடர் கூறிய தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஏற்கனவே இவர் சொன்ன வார்த்தைக்கு பின் நடிகை சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து பிரிந்துவிட்டனர். ஒருவேலை அப்படி இருக்குமோ என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
