திரிஷாவின் கணவர் அவர்தானா? அம்மாவிடம் கேட்ட பிரபலம்!! லைலெண்ட்டாக கொடுத்த பதில்..
நடிகை திரிஷா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, நடிப்பில் கருப்பு படம் சமீபத்தில் வெளியாகி ரூ. 329 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. இப்படம் ஹிட் கொடுத்தாலும் திரிஷாவுக்கு மறுப்பக்கம் அவர் பெயர் சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இருந்தே சில நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கிய திரிஷா, தற்போது விஜய்யுடன் நெருக்கம் காட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணத்தை நிறுத்தினார் திரிஷா. இதனையடுத்து திரிஷா படங்களில் சமீபகாலமாக கவனம் செலுத்தி வரும் நிலையில், விஜய்யுடன் இணைந்து திருமண நிகழ்ச்சி சென்ற விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் பிஸ்மி அளித்த பேட்டியொன்றில், சில காலத்துக்கு முன் சூர்யா என்பவர் எல்லா யூடியூப் சேனல்களிலும் அமர்ந்து கொண்டு, நான் திரிஷாவின் கணவர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.

பிஸ்மி
யூடியூப் சேனல்களும் அது உண்மையா? இல்லை பொய்யா? என்று தெரியாமல் ஒளிப்பரப்பினார்கள். நன் அந்த சமயத்தில் திரிஷாவின் தாயை தொடர்பு கொண்டு, உங்கள் மகளின் கணவர் என சூர்யா சொல்கிறார், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே? என்று கேட்டேன்.

அதற்கு திரிஷா அம்மா, இல்லை நாங்கள் வழக்கு போட்டு அவரை பெரிய ஆளாக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார். இதுதான் நடிகைகளின் பலவீனம், அதனால் தான் எல்லோரும் இஷ்டத்துக்கு பேசுகிறார்கள் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.