நிம்மதி இல்லாமல் தவிக்கும் இயக்குனர்!! வேடிக்கை பார்த்து ரசிக்கும் சியான் விக்ரம்..
இயக்குனர் கெளதம் வாசுதேவன், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு இயக்கிய படம் துருவ நட்சத்திரம். விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், டிடி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகிய இப்படம், ஆரம்பம் முதலே பல சிக்கல்களை சந்தித்து வந்தது.
அதையெல்லாம் தூக்கி போட்டு படத்தினை முடித்தார் கெளதம் வாசுதேவ் மேனன். ஆனால், தற்போது வெளியிட பணம் இல்லாமல் பல கஷ்டங்களை சந்தித்து வருகிறார். இதற்காக கிடைக்கும் படங்களில் நடிப்பை வெளிப்படுத்தி அதன்மூலம் காசு சேர்த்து வந்தார்.
இதற்கு முக்கிய காரணமே ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தானாம். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய 2. 40 கோடி ரூபாயை கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று வழக்கு தொடுத்ததால், என்ன செய்வது என்று கெளதம் மேனம் குழம்பி வந்துள்ளார்.
இதனால் நிம்மதி இல்லாமல் வேலை கவனம் செலுத்த முடியாமல் தவித்து வந்தார் கெளதம். இப்படம் வெளியான பின் நடிகர் விக்ரமை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் விக்ரம் இந்த விசயத்தை தலையை காட்டாமல் இருந்து வருகிறார். ஒரே ஆளாக இருந்து இந்த பிரச்சனையை சமாளித்து வரும் கெளதம் மேனன், துருவ நட்சத்திரங்கள் படத்தை வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியிடவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.