40 வயசாச்சு.. இப்ப போய் இப்படி! ஓப்பனாக பேசிய ஜோதிகா
Jyothika
By Parthiban.A
நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் நடிக்க வந்து, அதன் பின் சூர்யா உடன் காதலில் விழுந்து அவரையே திருமணமும் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
திருமணம் ஆகி குழந்தைகள் பெற்று வளரும் வரை ஜோதிகா குடும்ப வாழ்க்கையில் தான் கவனம் செலுத்தி வந்தார். அதன் பின் 36 வயதினிலே என்ற படம் மூலமாக ரீஎன்ட்ரி கொடுத்து தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி என தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் கவனம் ஈர்த்து இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது ஜோதிகா அளித்திருக்கும் பேட்டியில் "எனக்கு 40 வயதாகிவிட்டது, இந்த வயசில் எனக்கு இப்படி பட வாய்ப்பு வருகிறது. இதை நான் திட்டமிடவில்லை"
"தயாராகவும் இல்லை, யோசிக்க கூட இல்லை, ஆனால் பட வாய்ப்பு வந்துகொண்டே இருக்கிறது" என கூறி இருக்கிறார் ஜோதிகா.