எதுக்கெல்லாம் போராடனும்னு இல்லையா! கள்-க்கு தடையை நீக்க போராட்டமா?
தமிழகத்தில் மது விற்பனையை அரசு நடத்தி விற்கும் போது பனை மரத்தில் இருந்து இறக்கும் கள் விற்பனையை 33 ஆண்டுகளாக தடை விதித்து வருவதை எதிர்த்து சிலர் போராட்டங்களை செய்து வருகிறார்கள்.
எவ்வளவு தான் மது மக்கள் அருந்தினாலும் கொரோனா லாக்டவுன் சமயம் முடிந்து தளர்வுகள் அறிவித்த உடன் பலர் எங்கு சென்றார்கள் என்றால் மது கடைக்குத்தான்.
கள்ள சந்தையில் விற்கப்படும் மதுக்களை ஒழிக்கதான் மதுக்கடையில் தமிழகத்தில் அனுமதித்துள்ளோம் என்று பல அமைச்சர்கள் கூறியும் வருகிறார்கள்.
அப்படியிருக்க இயற்கையாக கிடைக்கும் உடலுக்கு நன்மை கொடுக்கும் கள்-ளுக்கு 17 வருடங்களாக அனுமதி கொடுக்க வேண்டும் என்று கள் இயக்கம் போராடி வருகிறார்களாம்.
இதற்கு காரணமாக மது ஆலைகள் மூடப்படும் என்பது தான் என்றும் கூறி வருகிறார்கள். இதை பலர் கலாய்க்கும் விதமாக எதுகெல்லாம் போராட்டனும்னு அவசியம் இல்லையா என்று கூறி வருகிறார்கள்.