அசிங்கப்பட்டேன்.. தூக்கத்தை இழந்தேன்!! குக் வித் கோமாளியில் அழுத மணிமேகலை..
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக பயணித்து வந்த விஜே மணிமேகலை பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட மணிமேகலை சில சீசன்களாக தொகுப்பாளினியாக பணியாற்றினார்.
தற்போது நடந்து வரும் குக் வித் கோமாளி 5வது சீசனிலும் ரக்ஷனுடன் தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை, பெரிய தொகுப்பாளினி தன் வேலை சரியாக செய்யவில்லை என்று கூறி மறைமுகமாக விஜே பிரியங்காவை தாக்கி பேசினார். மேலும் தான் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் கூறியிருந்தார்.
இந்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மணிமேகலை பேசிய ஒரு எமோஷ்னல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முந்தைய சீசனில் நடுவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் சேர்ந்து மணிமேகலைக்கு விருது ஒன்றை வழங்கி சிறப்பித்தனர். அதை வாங்கிய மணிமேகலை, மனசுல ஒன்னை வெச்சிட்டு வெளியில் வேற ஒன்னு பேசுவதில் எனக்கு எப்பவுமே நம்பிக்கை இல்லை.
இங்கே இருக்கும் போட்டியாளர்களிடம் எப்படி சமைக்க போறீங்க? என்று கேள்வி கேட்டாலும் உண்மையில் நிகழ்ச்சி முடிந்து இந்த செட்டைவிட்டு போகும்போது எல்லோருக்குமே சூப்பரான விஷயம் நடக்கணும் என்று சொல்லி நினைச்சுக்கிற முதல் ஆள் நான் தான். என் வாழ்க்கையில் எனக்கு 2 பெரிய விஷயமாக இருப்பது ஒன்று உசைன், மற்றொன்று என் தன்னம்பிக்கை.
எனக்கு கொடுக்கப்பட்ட விஷயத்தை நான் சரியாக செய்யாவிட்டால் எனக்கு தூக்கமே வராது, எனக்கு நிறைய பழக்கப்பட்ட விசயம் வெறும் ஆங்கரிங் மட்டும் தான். சீசன் ஒன்றில் புகழ், பாலாவை போல் காமெடியாக பேச எனக்கு சரியாக வரவில்லையே என்று வெட்கமா இருக்கும்.. அசிங்கமாக இருக்கும். வீட்டுக்கு சென்று உசேன் கிட்ட அழுதிருக்கிறேன்.
எனக்கு பெர்மான்ஸ் வரமாட்டேங்குதே என்று கேவலமாக இருக்கும், சீசன் 2வில் இந்த பொண்ணை ஆங்கரிங்க்கு கூப்பிடாதீங்க என்று கமெண்ட் செய்வார்கள் என்று விக்கி விக்கி கண்ணீர் விட்டு அழுதுள்ளார் விஜே மணிமேகலை. இப்படி அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக, இதற்கு பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக பேசி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.