குடைபிடிக்க ஒருவர், சேலையை பிடிக்க இன்னொருவர்.. எல்லைமீறும் நடிகையை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
Indian Actress
By Parthiban.A
சினிமா நடிகர் நடிகைகள் செய்யும் ஒரு சின்ன விஷயம் கூட இணையத்தில் அவர்களுக்கு நல்ல பெயரையும் பெற்று தரும், அல்லது ஜஸ்ட் மிஸ் ஆனால் பெயரை மொத்தமாக டேமேஜ் கூட செய்துவிடும். அப்படி நெட்டிசன்களிடம் தற்போது சிக்கி இருப்பவர் பாலிவுட் நடிகை நோரா படேஹி.
அவர் ஒரு தொலைக்காட்சி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார். அதன் படப்பிடிப்புக்காக வந்த அவர் மும்பையில் கொட்டும் மழையில் காரில் வந்து இறங்கினார்.
அப்போது அவர் நனைத்துவிடாமல் இருக்க ஒருவர் குடை பிடித்தார், மற்றொரு நபர் அவரது புடவையை பிடித்துக்கொண்டார். அவர் மழையில் நனையாமல் கேரவனில் சென்று ஏறிக்கொண்டார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "இவர் என்ன மகாராணியா? இவரது புடவையை காப்பாற்ற ஒரு நபர் மழையில் நனைய வேண்டுமா" என கமெண்டில் வறுத்தெடுத்து வருகின்றனர்.