சிம்புவை ஓங்கி அடிக்க பாய்ந்த பிரபல நடிகர், ஓவர் வாய் உடம்புக்கு ஆகுமா
தமிழ் சினிமாவில் நடிகர்கள் வெளியில் தான் கழட்டி தழுவி நாங்கள் நண்பர்கள் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், எல்லோர் மனதிலும் பல கிலோ கணக்கில் வஞ்சங்கள் இருக்கும்.
நான் பார்த்து வளர்ந்த பையன் இன்னைக்கு என்னைய தாண்டி போய்ட்டான் என்ற விரக்தியும் எல்லோர் மத்தியிலும் இருக்கும்.
அந்த வகையில் சிம்பு தான் வளர்ந்து வரும் நேரத்தில் பேசாத வாய் இல்லை வளர்க்காத சண்டை இல்லை, இவரை பற்றி கௌதம் மேனன் தவிர ஒருவரும் குட்புக்கில் சொன்னது இல்லை, கௌதமையே தள்ளி போகாதே பாட்டு எடுக்க சிம்பு அலையவிட்டது வேறுக்கதை.
இந்நிலையில் சிம்பு வளர்ந்து வந்த நேரத்தில் ஒருநாள் நடிகர் அருண்விஜய்யிடம் ஏடாகூடாமாக எதோ பேசியுள்ளார். இது அருண் விஜய்க்கு மிக கோபம் வர ஒரு கட்டத்தில் வாய் தகராறு கைகலப்பாக மாறியுள்ளது, அருண் விஜய் சிம்புவை எகிறி அடிக்க சென்றார் என பத்திரிகையாளர் அந்தனன் கூறியுள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் பேசி அழைத்து சென்றுள்ளனர். மேலும், தற்போது செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு, அருண் விஜய் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.