அமைச்சர் ராஜ்மோகனின் டபுள் மீனிங் ஜோக்!! கைத்தட்டி சிரித்த சுசித்ராவின் எக்ஸ் கணவர்!! பிரபல பதிவு..
அமைச்சர் ராஜ்மோகன்
70 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை தமிழ்நாட்டில் தவெக தலைவர் உள்ளே புகுந்து அனைத்துயும் மாற்றியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக பதவியேற்று 100 நாட்களுக்கும் மேலாகியும் பலரும் இந்த ஆட்சியை விமர்சித்து வருகிறார்கள். தற்போது சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக பல நாட்களாக நடந்து வருகிறது.

இதில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காரசாரமாக பேசி வருகிறார்கள். அந்தவகையில் பள்ளிக் கல்வித்துரை அமைச்சர் ராஜ்மோகன், சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளை சமாளித்து பேசி வருகிறார்கள். பழங்கால விஷயங்கள், முக்கியமாக பேரவையில் எந்த விஷயம் பேசினாலும் விஜய்க்கு பதில் பேசும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட மும்மூர்த்தி அமைச்சர்களில் அவரும் ஒருவராக இருந்து பேசி வருகிறார்.

டபுள் மீனிங் ஜோக்
இப்போதுகூட நேபாளம் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது தொடர்பாக டெல்லிக்கு விசிட் அடித்திருக்கிறார் ராஜ்மோகன். அவ்வப்போது பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து வரும் நிலையில், அவர் ஸ்டான்ட் அப் காமெடி செய்த வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அதனை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ஃபாரெஸ்ட் ஏரியா என்றால் என்ன? இந்நாள் பள்ளிக்கல்வி மினிஸர் அந்நாளில் அசத்திய அடல்ட் ஸ்டான்ட் அப் காமெடி என்று கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Memories:
— Blue Sattai Maran (@tamiltalkies) August 28, 2026
Forest Area என்றால் என்ன?
இந்நாள் பள்ளிக்கல்வி மினிஸ்டர் அந்நாளில் அசத்திய அடல்ட் ஸ்டான்ட் அப் காமடி.
pic.twitter.com/DBCidt62Qh
அந்த வீடியோவில் ராஜ்மோகன், கால்களுக்கு நடுவே கைகளை கொண்டு சென்று அப்படியே மேலே வந்தோம் என்றால் காடு பகுதி. காட்டினை ஒழுங்காக பார்த்துக்கொண்டால்தான் அடுத்த தலைமுறை இருக்கும் என்று இரட்டை ஆர்த்த காமெடியை பேசியுள்ளதுதான் அது. அதை கேட்டு பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் கைகளை தட்டி சிரிப்பது தான் தற்போது பேசுபொருளான ஒன்றாக அமைந்திருக்கிறது.